உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கடந்த கால படுகொ*லைகளில் இருந்து வேறுபடுகின்றது நீர்கொழும்பு கலவரம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளைப் படுகொலை செய்வதற்காகவே அரசினால் திட்டமிட்டு, அதிகாரிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சிறைக்கலவரங்களிலிருந்து, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் முற்றிலும் வேறுபட்டது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது உரையில் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம், தற்போதைய அரசின் காவல் மற்றும் சிறைச்சாலை கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இலங்கையின் சிறைச்சாலைகளில் இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளே அறைக் கதவுகளின் திறப்புகளைக் குற்றவாளிகளுக்குக் கையளித்தமை தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதேபோல், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாமில் 27 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அரசின் நேரடித் திட்டமிடலுடன் இடம்பெற்ற ஒன்றாகும்.

இத்தகைய கடந்தகாலச் சம்பவங்கள் அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புத் தாக்குதல்களாகவே கருதப்படுகின்றன. ஆனால், அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக்கலவரம் அத்தகைய திட்டமிட்ட படுகொலைகளிலிருந்து வேறுபடுகின்றது. இது தற்போதுள்ள அரச கட்டமைப்பின் மனிதநேயமற்ற மற்றும் வினைத்திறனற்ற காவல் நிர்வாகத்தையே உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அன்று இழைக்கப்பட்ட அநீதி போன்றல்லாது, நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காவது உரிய நீதி கிடைக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0