குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரசாரத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது என முதலமைச்சர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக் கணக்குகளை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை வெளிப்படுத்தவில்லை என்றும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.