உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

LPL தொடரில் இருந்து பெத்தும் நிஸ்ஸங்க திடீர் விலகல்!

29 பார்வைகள்

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க, எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, நீண்டகாலமாக அவருக்கு இருந்துவரும் காயம் ஒன்றிலிருந்து முழுமையாகக் குணமடைவதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பெத்தும் நிஸ்ஸங்க, சர்வதேச போட்டிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட தொடர்களில் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான LPL வீரர்கள் ஏலத்திற்குத் தகுதி பெற்றிருந்த போதிலும், நேரடி ஒப்பந்தங்கள் மூலம் அவர் எந்தவொரு அணியிலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், 28 வயதான இவர் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும், இந்த இடைவெளிக் காலத்தைப் பயன்படுத்தி முறையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவரது முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0