உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள வர்த்தக நிலையங்களைப் பரிசோதிக்கும் விசேட நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சோதனை நடவடிக்கைகள் குறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் சுமார் 2 ஆயிரம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், சுகாதார விதிமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.” – என்றார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையும் வர்த்தக நிலையங்களைச் சோதனை செய்யும் விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது.

பொருட்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகள் குறித்து இதன்போது தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0