உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனுபவமற்ற அரசால் மக்களுக்கே துயரம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு மந்தகதியில் செயற்பட்டமையால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக அமைந்தன.

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஆரம்பித்த நாளிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை நாம் வலியுறுத்தினோம். எனினும், எமது ஆலோசனைகளை ஜனாதிபதி அலட்சியப்படுத்தினார்.

ஒன்றரை மாதத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசு கூறியது. அவ்வாறாயின், இந்த மாதத்தில் மாத்திரம் மூன்று முறை எரிபொருள் விலையை அரசு அதிகரித்தது ஏன்? கையிருப்பில் எரிபொருள் இருக்குமாயின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன?

தற்போதைய எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் குளறுபடியான வெளிவிவகாரக் கொள்கையினால் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதிருப்தியடைந்துள்ளன.” – என்றார்.

அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனுபவத்துடன் செயற்பட வேண்டும் என்றும், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய அரசு தவறியுள்ளது என்றும் அவர் இதன்போது கடுமையாகச் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0