இடை நிறுத்தப்பட்ட கொழும்பு வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் நடைமுறை.!
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இன்று முதல் மீண்டும் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், இன்று (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட இடங்களில் கடமையில் உள்ள ஊழியர்களிடமோ அல்லது டிஜிட்டல் முறையிலோ கட்டணங்களைச் செலுத்த முடியும்.விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார்.