மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!
மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கனேடிய உள்ளூராட்சி மன்றத் சம்மேளனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் பி.பிரதீப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தனி ராமநாயக்க, மதிப்பீட்டு உத்தியோகத்தர் கோவிந்தராஜ் டில்ஷான், நிகழ்ச்சி திட்ட அமைப்பாளர் லசிந்து பண்டார ஆகிய நால்வருடன் மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட தற்போதைய பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.புஷ்பகுமார மஸ்கெலியா பொது வைத்திய அதிகாரி எம்.எச்.ஈர்ஷாட், முன்னாள் வைத்தியர் கணேசலிங்கம் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நகர வர்த்தகர்கள், கலந்து கொண்டனர்.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக கனேடிய உள்ளூராட்சி மன்றம் 1 கோடி 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி வழங்கி இப் பணிகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் மூலம் நடைபவனியை மேற்கொள்ள நடை வீதி, நவீன முறையில் உடற்பயிற்சி நிலையம், ஆண், பெண் இருபாலரும் ஆடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்றவற்றை வடிவமைத்து இன்னும் மூன்று மாத காலத்தில் மீண்டும் மக்கள் பாவனைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


