உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கையின் மனிதாபிமான உதவிக்கு ஈரான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செயித் அப்பாஸ் அரக்ச்சி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார்.

நேற்று இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நகர்வுகளைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான நிலைமைகள் குறித்து ஈரானிய அமைச்சர் விஜித ஹேரத்துக்கு விளக்கமளித்தார்.

குறிப்பாக, கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய போர்க்கப்பலான ‘டெனா’வின் மாலுமிகளுக்கு உதவுவதில் இலங்கை அரசு மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகளுக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 மாலுமிகளின் சடலங்களை மீட்க இலங்கை வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அச்சடலங்களை அவர்களின் தாய்நாட்டுக்குக் கௌரவத்துடன் கொண்டு செல்ல உதவியமைக்காக அவர் இலங்கைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது விரிவாக விவாதித்தனர் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0