சித்தங்கேணி சிறிகணேசா வித்தாயாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி!
சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.
பின்னர் தேசியக் கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டதுடன் ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் விளையாட்டுப் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் அணிநடை மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வுநிகழ்வு நிறைவடைந்தது.பாடசாலை அதிபர் கலைவாணி அருள்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் யமுனா இராஜசீலன், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் செல்வராணி டினேஸ் மற்றும் கௌரவ விருந்தினராக பாடசாலை நலன்விரும்பி கங்காதரன் ஜனகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
