போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: நேற்று 968 பேர் கைது.!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் நடைபெற்றது. இதில் 968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 1,015 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு தடுப்புக்காவல் உத்தரவு, நால்வர் மீது சட்டவிரோத சொத்துக்களை தொடர்புடைய விசாரணைகள், மற்றும் ஒன்பது பேர் மேலதிக புனர்வாழ்வுக்காக அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் ஹெரோயின் 453 கிராம், ஐஸ் 656 கிராம், கஞ்சா 903 கிராம், 4,314 கஞ்சா செடிகள், குஷ் ரக 5 கிராம், ஹஷீஷ் ரக 28 கிராம், போதை மாத்திரைகள் 431, மதனமோதகம் 313 கிராம் மற்றும் மாவா 753 கிராம் ஆகியவை உள்ளடங்கும்.பொலிஸார் தெரிவித்ததாவது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்கு வைத்து இந்த தேசிய திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலப்படுத்தப்படும்