அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தொலைபேசி தொடர்பில் மாற்றம் – மனோ கணேசன் கவலை.!
கொழும்பு – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பிறகு, அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் ஏற்படும் மாற்றத்தைக் குறித்து கவலை தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். மனோ கணேசன் கூறியதாவது:
“நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாரம் ஒருமுறை இரவு 10 மணிக்குப் பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார்.
பல்வேறு விடயங்களைப் பற்றிய நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெறுவார்கள்.ஆனால், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் எந்த பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை.”
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஏற்பட்ட இந்த தொடர்பாடல் மாற்றம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.