உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பண்டாரியாவெளியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் இயங்கிவந்த பாரிய அளவிலான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


கொக்கட்டிச்சோலை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பண்டாரியாவெளி கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமான முறையில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.


சுற்றிவளைப்பின் போது நான்கு பரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சம் மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டதுடன், கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், முற்றுகை இடம்பெற்றவேளையில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

38 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0