உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பிரத்தியேக பேருந்து சேவை தொடக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக திட்டமிடப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டில் வரும். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், 10 நவீன, தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் வந்து சேர்ந்துள்ளன.


இவை சக்கர நாற்காலி பயணிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, பயணிகள் எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் ஏறி இறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் மற்றும் 80 பயணிகள் வரை பயணிக்க வசதி உள்ளது. மேலும், சக்கர நாற்காலி பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் பூரணமாக அடங்கியுள்ளன.


மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு, பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்குஒருமுறை மாக்கும்புர – கோட்டை மற்றும் மாக்கும்புர – கடவத்தை பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற முக்கிய மருத்துவமனைகளை இணைக்கும் பாதைகளில் பேருந்துகள் சேவை செய்யப்படுவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு பயணங்கள் மிகவும் வசதியானதாக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0