உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சிறைக்குள் சுரேஷ் சலேவை கொ*லை செய்ய முயற்சி; அரசு மீது விமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை, சிறைக்குள் வைத்து கொலை செய்ய அரசு முயற்சிக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் பழிவாங்கலுக்காகவே அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். சுத்தமில்லாத ஒரு சிறையினுள் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு இதுவரை முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எலிகள் ஓடித்திரியும் ஓர் அசுத்தமான சிறையிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுகாதார வசதியற்ற மலசலகூடத்துக்கு அருகில் அவர் வைக்கப்பட்டுள்ளதால், அவர் கடுமையான நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் அவரை வைத்திருப்பதன் மூலம், சிறைக்குள்ளேயே அவரைப் படுகொலை செய்ய அரசு முயற்சிக்கின்றது. அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது.

சுரேஷ் சலேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாகப் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ளோம். நாட்டின் மக்கள் அனைவரும் இந்த நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0