இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ள இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு.!
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.