பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.!
பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு சென்றிருந்தார்.இதன்போது அவர் அங்கு பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதுதவிர, இரு தரப்பு விடயங்கள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.