சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் பிரதான கணக்காய்வாளர் கைது.!
சட்டவிரோத சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் பிரதான கணக்காய்வாளர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) (1) இன் படி, சந்தேக நபர் தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட அதிக சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.