நீர் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் தற்போது இல்லை – அமைச்சர் சுசில் ரணசிங்க.!
நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை என்று நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையினால் எரிபொருள் கட்டணங்கள், உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிவாயு கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இந்நிலையில், அடுத்த நீர் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படுமென திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.