உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வலயக் கல்வி அலுவலகத்தில் இலஞ்சம்; அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய இரு அதிகாரிகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அம்பாறை, தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார்தாரர் சேவையை விட்டு வெளியேறிய பிறகு, அவரை மீண்டும் பணியில் சேர்த்து, கல்வி அமைச்சின் மூலம் தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் அவரது இணைப்பை நீடிக்க, சந்தேக நபர்கள் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0