கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா.!
கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் “மகிழ்ச்சி, புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” எனும் தொனிப்பொருளில் இன்று (29) தரம் 1 மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் SMS.ரிசானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதிபர், பிரதி அதிபர் உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் PSI ஒருங்கிணைப்பாளர் தலில் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர், பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












