உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

அரசியல் நோக்கங்களுக்காகவே தொழிற்சங்க போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
47 பார்வைகள்

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே பணிப்புறக்கணிப்பானது முழுக்க முழுக்க அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்சங்க போராட்டமாகும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஊடகங்களுக்கு இன்றைய தினம் கொழும்பில் தெரிவித்தார்.

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகச் தொழிற்பட்ட மற்றும் கையெழுத்திட்ட தரப்பினரே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பெயர்கள் மற்றும் பின்னணியை ஆராயும்போது இதன் பின்னணியிலுள்ள அரசியல் சதி தெளிவாவதாகக் குறிப்பிட்டார்.

இப்போராட்டம் காரணமாக பயணச்சீட்டுகள் வழங்கப்படாமல் ரயில்கள் இயக்கப்படுவதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுகின்ற போதிலும், தினசரி ரயிலைப் பயன்படுத்தும் மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காகவே பயணச்சீட்டுகள் இன்றியேனும் ரயில் சேவைகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கண்டி – பேராதனை ரயில் பாதை அபிவிருத்தி குறித்துப் பேசிய அவர், ‘களு பாலம்’ (கருப்பு பாலம்) புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போதைய பாலத்திற்குச் சமாந்தரமாக மேலும் ஒரு புதிய பாலத்தைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

45 0 0