கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உ*யிரிழப்பு.!
கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், உந்துருளியை செலுத்திச் சென்றவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்றதையடுத்து காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

