யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு.!
தமிழினப் படுகொ*லைக்கு சர்வதேச நீதி கோரியும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் வருகின்ற 13ஆம் திகதி யாழ் நகரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூரில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த் தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

