உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

புத்தள – கதிர்காமம் வீதியில் காட்டு யானை தாக்குதல் : 10 பேர் காயம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
34 பார்வைகள்

புத்தள – கதிர்காமம் வீதியில் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல், சிலாபத்திலிருந்து கதிர்காமம் நோக்கி வந்த வழிபாட்டாளர்கள், கதிர்காம வழிபாட்டை முடித்துக்கொண்டு புத்தள – கதிர்காமம் வீதியூடாக மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ND 9105 என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த பேருந்தில் விபத்து நடந்த வேளையில் சுமார் 60 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் நின்றிருந்த காட்டு யானை திடீரென பேருந்தைத் தாக்கியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பயணிகள் உடனடி சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக காயமடைந்த எவரின் நிலையும் பலத்த காயங்களுடன் ஆபத்தான கட்டத்தில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் அதிகார மோகத்தை தோற்கடிக்க வேண்டும் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும்…

41 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைய அரசின் கீழும் தொடர்கின்றன!

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயரை இன்று சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை. (மன்னார் நிருபர்) (03-09-2026) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட…

57 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

மட்டக்களப்பு ,மண்முனை தெற்கு எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மண்முனை தெற்கு…

26 0 0