உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி14 வயது சிறுவன் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
51 பார்வைகள்

பொலன்னறுவை, சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகம பகுதியைச் சேர்ந்த சிறுவன், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலிக்கு அருகில் சென்றபோது மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அதற்கு மின்சாரம் வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிபுர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம்…

52 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் – சுகாஷ் கண்டனம்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

68 0 0
இலங்கை செய்திகள்

2026 தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக…

70 0 0
இலங்கை செய்திகள்

நிலையான உணவு முறைமைகள் பற்றிய இலங்கையின் பாரம்பரிய அறிவிலிருந்து உலகிற்கு முக்கியமான ஒரு பாடம்

பூட்டானில் நடைபெற்ற உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் தொடர்பான இலங்கையின் பாரம்பரிய அறிவை பிரதமர் உலகிற்கு எடுத்துரைத்தார். 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி பூட்டானின்…

33 0 0