உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
118 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபியே இவ்வாறு உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியை தற்போது விமர்சிப்பவர்கள்கூட தந்தை செல்வாவின் செயற்பாடுகளை விமர்சிப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.

அத்தகைய தலைவரின் நினைவுத் தூபியை உடைத்து சேதப்படுத்தியுள்ளமை வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை என்றபோதிலும், அவை ஒரு நினைவுத் தூபியை உடைக்கும் அளவுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் அனைவரது மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பவத்துடன் தொடர்புடைய விஷமிகளை உடனடியாகக் கைது செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0