உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
62 பார்வைகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்த குழுவுக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காலி திசைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு அப்பாற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தனது தந்தையை பொலிஸார் தாக்கியதாகக் கூறி, நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் பதற்றமான முறையில் நடந்துகொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்துப் பொலிஸார் கூறுகையில், குறித்த முதியவர் 24ஆம் திகதி இரவு மதுபோதையில் வீதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்ய முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததாலேயே காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

குறித்த முதியவர் பலப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், இவ்விசாரணையின் முடிவுகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று புதன்கிழமை (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை…

59 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

தற்போது தடுப்புக்காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற…

22 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

44 0 0