உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை; பலரது கண்கள் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
52 பார்வைகள்

யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் அதிகளவான ஒளி பயன்படுத்தப்பட்டதால் பலரது கண்கள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆலயத்தின் வளாகமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதில் அலங்கரிக்கப்பட்ட பார்வைக்கு ஆரோக்கியமற்ற மின் விளக்குகளால் இதுவரை ஏறக்குறைய 35 பேருக்கு இன்று காலை கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

மேலும், குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்றவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று கண் பரிசோதனை செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

56 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

64 0 0