செம்மணி “நீதியின் ஓலம் – 2” போராட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி பங்கேற்பு.!
யாழ் செம்மணியில் நடைபெற்றுவரும் நீதியின் ஓலம் -2, இனவழிப்பு நீதிக்கான மாபெரும் மக்கள் எழுச்சி போராட்ட இடத்திற்கு நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சென்று நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் போராட்டத்திலும் இணைந்து கொண்டார்.
மேலும், இதன்போது வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா, உறுப்பினர் ச.சனோஜன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) ஆகியோரும் இணைந்திருந்தனர்.



