உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வடமராட்சி வடக்கில் புதிய இரண்டு வீடுகள் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
97 பார்வைகள்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் வீடமைப்பு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும், தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில இடம்பெற்றது. இதில் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களினால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரன் அவர்களுக்கு குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கியமான ஆதரவாக அமையும் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட J/412 கிராம சேவையாளர் பிரிவிலும் நேற்று சமுர்த்தி வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான “ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்” அவர்களினால் மகேந்திரராஜா மகேஸ்வரி எனும் பயனாளியிடம் குறித்த வீடு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0