பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு.!
கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர மற்றும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் சில சேவைப் பகுதிகளில் இன்று (22)புதன்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை 4 மணிநேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த நீர்வெட்டு உடுவாவல, பொல்வத்தை வீதி, கிளவத்தை, வாஸ்கேவத்தை, உட பொக்காவல, பல்லே பொக்காவல, பிஹங்கேவத்தை, அஹஸ்லியத்த, கொட்டுவேவத்தை, நாகஹமுல வீதி, தவளன்கொட, பலகொல்ல, ஹப்புகொட, பட்டியவத்தை, ராஜபிஹில்ல, மொரகஹவெல, அத்தரகம, உல்லாதுபிட்டிய வீதி, பொஹோரபெத்தன்ன வீதி மற்றும் அத்தரகம தெகிந்த வீதி ஆகிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மேலும் பல பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேடவல (பழைய) சேவைப் பகுதி
காவும்கொஹே வீதி, கோனிகொட, ஜெயந்தி வீதி, குருக்கட்டே, பால்கும்புர, இடமேகம, அம்பேகம, கொரொக்கஸங்க வீதி, எலமல்பட்ட, கொட்டுதென்ன, பெதியகொடவத்தை, களுவான, போத்தோட்ட, ஹரன்கஹதென்ன, தொடந்தென்ன, கும்புரேகெதர, தெம்பரலொவ, திப்புட்ட மற்றும் தலபெல்லகொட வீதி.
கலகெதர சேவைப் பகுதி
கலகெதர, வேவபத, பொயாகொடவைச் சுற்றியுள்ள பகுதிகள், ரம்புக்கனை வீதி, பொஹோலியத்த வீதி மற்றும் குருணாகல் வீதி.
மேடவல (புதிய) சேவைப் பகுதி
படுகொட, அஹலகசின்ன, தித்தேனிய, ஓவிஸ்ஸ, வடகொட, தொபகம்மன, ஹெடேனிய, சூரியக்கும்புர, அம்பருப்ப, ஹரன்கஹவ, பொக்காவல, வலதென்ன மற்றும் பதிராட.
மாவத்தகம சேவைப் பகுதி
மாவத்தகம, பரந்தன வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.