வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!
தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (22) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.