உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கோரமான வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இடம்பெற்ற உயிரிழப்புகளில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் உள்ளடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்தப் பாரதூரமான வன்முறைகள், அதற்கான பின்னணி மற்றும் இந்தச் சம்பவத்துக்கு  வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து மிக விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசு தற்போது விசேட விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்த மூவர் அடங்கிய குழு, சிறைச்சாலையின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை, இந்தக் குழு விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

முன்னதாக, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்திய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்குத் தகுந்த நீதி பெற்றுத்தரப்படும் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்முறைச் சம்பவத்தின் போது தற்காப்புக்காகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அதிகாரிக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனச் சக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையையும் அமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0