இலங்கை அணிக்கெதிரான மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான இந்த குழாமில், அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் திறமையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஷாய் ஹோப் தலைமையில் அகீம் அகஸ்டே, ஜோன் காம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மெத்யூ போர்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், சிம்ரோன் ஹெட்மையர், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த ஒரு மாத கால சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரைத் தொடர்ந்து ஜூன் 11 முதல் 14 வரை மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரும், அதனைத் தொடர்ந்து ஜூன் 25 ஆம் திகதி முதல் ஜூலை 7 வரை அன்டிகுவாவில் இரண்டு டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.