கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குரிய காணியில் போடப்பட்ட குப்பைகள் அகற்றல்.!
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்திற்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில் கனரக வாகனத்தின் உதவியுடன் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும் குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் செயற்படுத்திய மாநகர ஆணையாளர், தகவலை வெளிப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



