உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

27 பார்வைகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதை குஜராத் டைட்டன்ஸ் அணி உறுதி செய்தது.

2022 ஆம் ஆண்டில் ஐபிஎல்-லில் அறிமுகமானதிலிருந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 2022, 2023, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அவர்கள் தங்களது முதல் சீசனிலேயே ஐ.பி.எல். பட்டத்தை வென்ற நிலையில், தற்போது இந்த ஆண்டு இரண்டாவது கிண்ணத்தை வெல்லும் நோக்கில் உள்ளனர்.

அந்த அணி 14 போட்டிகளில் ஒன்பது வெற்றிகளைப் பெற்று, 18 புள்ளிகளைக் குவித்து, 2026 ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது.

அணித் தலைவர் ஷுப்மன் கில் 84 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாய் சுதர்சனின் 64 ஓட்டம் என்ற ஆட்டம், அவரை 2026 ஐபிஎல் அதிக ஓட்டங்கள் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியதுடன், 14 போட்டிகளில் 638 ஓட்டங்களுடன் ஆரஞ்சு தொப்பியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

ஷுப்மன் கில் 13 இன்னிங்ஸ்களில் 616 ஓட்டங்களுடன் அவரை நெருக்கமாகப் பின்தொடர்கிறார்.

230 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சால் 140 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

சென்னை அணி சார்பில் சிவம் துபே மாத்திரம் அதிகபடியாக 17 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் குஜராத் அணி சார்பில் மொஹமட் சிராஜ், ரஷித் கான் மற்றும் ககிசோ ரபாடா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் சிராஜ் தெரிவானார்.

கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்வியைத் தழுவியதால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை அவர்கள் தவறவிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0