உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு ரசீது!

27 பார்வைகள்

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக் கிணத்தை வென்றது.

இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இதற்கிடையே, வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக லண்டனில் உள்ள கிராஸ்வெனார் உணவகத்தில் பீர், கேம்பெய்ன், சிகரெட் போன்றவற்றை வாங்கியதான ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த ரசீதில் கபில் தேவ் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த ரசீது போலியானது என்றும், அதில் போடப்பட்டுள்ள கபில் தேவ் கையெழுத்தும் போலியானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கீர்த்தி ஆசாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய 1983ம் ஆண்டு இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றிவிழா பில் முற்றிலும் போலியானது.

லண்டனில் உள்ள ‘Grosvenor Hotel’-ல் 764.40 பவுண்டுகளுக்கு நடைபெற்ற விருந்துக்கான ரசீது மற்றும் கபில்தேவின் கையெழுத்து போலியாக உருவாக்கப்பட்டது.

உணவகத்துக்கு நாங்கள் செல்லவே இல்லை.

லார்ட்ஸ் மைதானத்துக்கு அடுத்து உள்ள ‘Westmoreland Hotel’-ல் தான் தங்கியிருந்து வெற்றி விழாவைக் கொண்டாடினோம்.

கபில்தேவின் கையெழுத்தும் இந்த ரசீதில் போலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி ஆசாத் 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0