உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பைகள் காற்றினால் பரவி விழுகின்றன.

மேலும், குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் ரின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்காத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணியில் உள்ள குப்பைகளில் நீர் தேங்குவதனால் டெங்கு போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுகிறது.

மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன.

அத்துடன் இப்பகுதியில் உள்ள நாய்கள், மாடுகள், காகங்கள் குப்பைகளை உண்பதனால் அயலில் உள்ள கிணறுகள், கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0