சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மகோகனி மரக்கட்டைகள் பறிமுதல்.!
கேகாலையிலிருந்து ஹட்டன், குடகமவில் உள்ள ஒரு மர ஆலைக்கு திருட்டுத் தனமாக கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மகோகனி மரக்கட்டைகள் பலவற்றை, ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் வன பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் (22) ஆம் திகதி பிற்பகல் பறிமுதல் செய்தது.
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக பருத்தி மற்றும் பஞ்சு ஆகியவற்றால் மூடப்பட்ட நிலையில் அந்த மகோகனி மரக்கட்டைகள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் நிசங்க கொடமுல்ல ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், குற்றப்பிரிவுக்கு பொறுப்பான நிசாந்த டி சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவால் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மரக்கட்டைகள், ஹட்டன் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.