உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரசியல் அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அரச அதிகாரிகள் தனிப்பட்ட தலையீடுகள் அல்லது அரசியல் அழுத்தங்கள் இன்றி, சட்டத்துக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ப சுதந்திரமாகத் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

நீதிமன்றங்களுக்கு வருகை தரும் நபர்கள் எத்தகு அந்தஸ்துடையவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கௌரவத்துடன் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

நீதிமன்ற பாதுகாப்பு III ஆம் தரப் பதவிகளுக்காகப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில், நீதிமன்ற பாதுகாப்புப் பணிகளுக்காக 69 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எவ்வித வெளித்தரப்பு அழுத்தங்களுக்கும் அடிபணியாது, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையாகச் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுடன் பண்பாக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

23 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

30 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0