உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

QR நடைமுறை காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் அவதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து முச்சக்கரவண்டி சாரதிகள் கூறுகையில்,
இன்று முதல் அமுலில் வரும் QR நடைமுறை காரணமாக வாராந்தம் வழங்கப்படும் 15 லீற்றர் எமக்கு போதுமானது அல்ல. வாராந்தம் எமக்கு குறைந்தபட்சம் 30 லீற்றர் எரிபொருள் வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தனியார் பேருந்துகள் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அவற்றிற்கான எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீற்றர் எரிபொருள் போதுமான அளவு இல்லை என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாராந்தம் 80 லீற்றர் எரிபொருள் தேவை என்று கூறுகின்றனர்.

நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து உணவு, வீட்டு வாடகை மற்றும் பாடசாலை செலவு, மருத்துவ செலவு, வாகன செலவு போன்றவற்றை நடாத்த வேண்டும். வழங்கப்படும் 40 லீற்றர் எரிபொருள் எமக்கு போதுமானது இல்லை என்று தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகள் இது போன்றே கூறுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0