சண்டிலிப்பாய் ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டுவிழா!
சண்டிலிப்பாய் வடக்கு உலாக்காவளை ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டு விழா நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து குறித்த கிராமத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டன.
சனசமூக நிலையத்தின் தலைவர் செ. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
