செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பற்றிஅரச நிறைவேற்று அதிகாரிகளுக்குச் செயலமர்வு!
நேற்று வியாழக்கிழமை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், ‘அரச சேவையை மாற்றியமைப்பதற்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.இந்நிகழ்வை ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்தது.
அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசு வேலைத்திட்டத்தின் ஓர் பகுதியாக, அதிகாரிகளை புதிய தொழில்நுட்பத்திற்குப் பயிற்றுவித்தும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சாதக அணுகுமுறையை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவன முன்னாள் பணிப்பாளர்களும், ஜனாதிபதி அலுவலகத்தின் டிஜிட்டல் திறன்மேம்பாட்டு திட்ட வளவாளர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.
சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள சிவில் சேவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.