காத்தான்குடி கடற்கரையில் மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது.!
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அழககோன் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இப்பொருள் நார்சேர்க்கை பொருளால் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது.
கப்பல் தரைதட்டும் போது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்டத்தில் கருதப்படுகிறது.
இம்மர்மப் பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.கரையொதுங்கியுள்ள இப்பொருள் தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படுவதுடன், அதைப் பார்வையிட பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.