புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோடிகளில் நலனுதவி.!
நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக 9 கோடி 62 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அப்பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 938 பயனாளிகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நலன்புரித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வழங்கும் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களின்குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.