தற்போதைய அரசு ரணில் விக்கிரமசிங்கை நேரடியாக இலக்கு வைக்கிறது: ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு.!
காலி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க முன்னணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் விசேட மக்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.வஜிர அபேவர்தன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கூறியதாவது:
“தற்போதைய அரசு எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்கவை நேரடியாக இலக்கு வைக்கிறது.
ஒரு தேசியத் தலைவராக அவர் நாட்டுக்காக செய்த சேவையை இன்று சிலர் மறந்து விடுவது கவலைக்குரியது. நாட்டின் தொழில்முயற்சி, முதலீட்டு வலயங்கள், பொருளாதார மீட்பு, 24 மணி நேர மின்சாரம், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் நிலை ஆகிய அனைத்திலும் அவரது சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டவர் அவர்.”இந்நிகழ்வில் காலி மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரிதும் கலந்து கொண்டு, ரணில் விக்கிரமசிங்கை நேரடியாக ஆதரித்து அவரைத் தொடர்புடைய நடவடிக்கைகளில் பாதுகாப்பதற்கான திட்டங்களை ஆராய்ந்தனர்.ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பின்படி, இன்று ஆரம்பமான இந்த விசேட மக்கள் சந்திப்பு நாளையும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.