குருநாகல் – தம்புள்ளை வீதியில் விபத்து: இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்.!
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொக்கரல்ல பகுதியில் நேற்று (13) நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பிக்கப் வாகனமும், எதிரே வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தின் போது பிக்கப் வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்தச் சிறுமியின் தாயார் மற்றும் மாமா ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் முதலில்அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.