உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈரானிய மாலுமிகளின் உடல்களுடன் புறப்பட்ட விசேட விமானம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சர்வதேச கடலில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று நேற்று (13) இரவு ஈரான் நோக்கிப் புறப்பட்டது.ரானிய ஏர்பஸ்–340 ரக விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விமானம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படை கப்பலான IRIS Lavan இல் இருந்த 183 ஈரானிய மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு பின்னர் ஈரான் நோக்கிச் செல்லவுள்ளது.


இதேவேளை, குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 84 பேரின் உடல்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல இயலாத காரணத்தால், முதல் கட்டமாக 45 உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.


கடந்த மார்ச் 4ஆம் திகதி சர்வதேச கடற்பரப்பில் நின்றிருந்த ஈரான்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 84 மாலுமிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0