உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பிரத்தியேக பேருந்து சேவை தொடக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக திட்டமிடப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டில் வரும். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், 10 நவீன, தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் வந்து சேர்ந்துள்ளன.


இவை சக்கர நாற்காலி பயணிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, பயணிகள் எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் ஏறி இறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் மற்றும் 80 பயணிகள் வரை பயணிக்க வசதி உள்ளது. மேலும், சக்கர நாற்காலி பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் பூரணமாக அடங்கியுள்ளன.


மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு, பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்குஒருமுறை மாக்கும்புர – கோட்டை மற்றும் மாக்கும்புர – கடவத்தை பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, மஹரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற முக்கிய மருத்துவமனைகளை இணைக்கும் பாதைகளில் பேருந்துகள் சேவை செய்யப்படுவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு பயணங்கள் மிகவும் வசதியானதாக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0