உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மின்சார தொழிற்சங்கங்களுடன் அரசு இணக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வுகளை வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் தமது சங்கங்களுக்கு இல்லை என்றும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தங்களது முக்கிய குறிக்கோள் என்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இதற்கிடையில், புதிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினருடன் ஜனாதிபதி இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பில் மின்சார தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறினர்.மேலும், புதிய நிறுவனங்களுக்கு வெளியிலிருந்து இணைக்கப்படவிருந்த மின்சார அதிகாரிகள் மற்றும் மின்சார பொறியியலாளர்கள் நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0